நாட்டில் மேலும் 220 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.
இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 650 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 748 பேர் குணமடைந்து, சிகிச்சை மையங்களில் இருந்து இன்று வெளியேறியுள்ளனர்.
தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு விடுத்துள்ள நாளாந்த கொரோனா நிலவர அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 373 ஆக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் தொற்றுறுதியான 3 ஆயிரத்து 813 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.