கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இரண்டு பிரதான காரணிகள் எதிர் பார்ப்பதாகச் சுகாதார சேவைகள் பதில் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
அதன் படி மரணிப்போர்களின் எண்ணிக்கை மற்றும் சிக்கலைக் குறைத்தல், கொரோனா தொற்று பரவலைக் குறைத்தல் ஆகியவை இதில் அடங்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இது வயது அடிப்படையில் தான் மேற்கொள்ளவேண்டும்.
அதன்படி, 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளோம் இதுதொடர்பாக சுகாதார சேவைகள் பணிப் பாளர் நாயகம் ஆலோசனை வழங்கியுள்ளதாக ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.