வாரியபொல – கட்டுப்பொத்த வீதியின் 10 ஆவது மைல்கல் பகுதியில் காவல்துறைக்கு சொந்தமான ஜீப் ரக வாகனமும், முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
முச்சக்கரவண்டியின் சாரதியும், அதில் பயணித்த அவரது தாயுமே இவ்வாறு உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 9 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுமிகள் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜீப் ரக வாகனத்தில் பயணித்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரும் சம்பவத்தில் காயமடைந்த நிலையில், கட்டுப்பொத்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்