வடக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா!

wp5867879
wp5867879

வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவருக்கு தொற்று என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 259 பேரின் மாதிரிகள் பி சி ஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் எவருக்கும் தொற்று இல்லை என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கப்பட்ட பி சி ஆர் பரிசோதனையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னாரில் 5 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மன்னார் நகர் சலூன் நடத்துபவருக்கு கடந்த வாரம் தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் தொடர்புடையோர் சுயதனிமைப்படுத்தப்பட்ட நிலையில் நால்வருக்கு தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் ஒருவர் மன்னார் வைத்தியசாலையில் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட நிலையில் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

கரவெட்டி மருத்துவ அதிகாரி பிரிவிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் கொழும்பில் ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளராகக் கடமையாற்றும் நிலையில் நவாலியில் வசிக்கும் அவரது மனைவிக்கு நேற்று தொற்று உள்ளமை கண்டறியப்பட்டிருந்தது.

வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியபட்டது. அவர் ஏற்கனவே தொற்றாளராக சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மீளவும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போது தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.