வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தின் 2009 ஆம் ஆண்டு சாதாரணதரம் மற்றும் 2012 ஆம் ஆண்டு உயர்தரவகுப்பு மாணவர்களால் குருதிதானம் இன்று (28) வழங்கப்பட்டது.
குறித்த மாணவர்களின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வை முன்னிட்டும் அன்னைபூமலர் அறக்கட்டளையின் நிர்வாகியின் பிறந்ததினத்தை முன்னிட்டும், வவுனியா பொது வைத்தியாசாலையின் குருதிவங்கியில் இன்றைய தினம் குருதி தானம் செய்யப்பட்டது.