வனவாசல தொடருந்து கடவையில் இராணுவ வீரர்கனை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று தொடருந்தினால் மோதப்பட்டதில் இருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் லொத்தர் சீட்டுகளை விற்றவரும் அதனை கொள்வனவு செய்த ஒருவருமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தினால் பேருந்தில் பயணித்த எவரும் காயமடையவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
வத்தளையிலிருந்து தொரண வீதிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து இன்று (01) காலை பொல்கஹாவெலவிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த தொடருந்தினால் மோதப்பட்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்களில் ஒருவர் கிரிபத்கொட வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மற்றையவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.