பணமில்லாத காரணத்தால் சேயோனின் பதவியைப் பறிக்க பரிந்துரை செய்த சிறீதரன்!

Untitled 1 5
Untitled 1 5

தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி தலைவர் பதவியைச்  நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு வழங்கவேண்டும்  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நேற்றையதினம் வவுனியாவில்  நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் மேற்குறிப்பிட்ட பரிந்துரையைச் செய்துள்ளார். தற்போது தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவராக உள்ள சேயோனிடம் பணவசதி இல்லாத காரணத்தால் பணவசதி உள்ள சாணக்கியனை தலைவர் பதவிக்கு தான் பரிந்துரை செய்வதாக சிறீதரன் குறிப்பிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழரசுக் கட்சியின் அடிமட்ட உறுப்பினராக இணைந்து பலகாலம் கட்சிப் பணியாற்றி தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி தலைவராக தெரிவுசெய்யப்பட்ட சேயோனை நீக்கி, கடந்த காலங்களில் மகிந்த அணியுடன் இணைந்து செயற்பட்டு அவர்களின் கட்சியில் தேர்தலைச் சந்தித்து அங்கே தோல்வியடைந்த காரணத்தால் தமிழரசுக் கட்சியில் அண்மையில் இணைந்த சாணக்கியனை பணம் என்ற ஒரே காரணத்திற்காக கட்சிப் பொறுப்பை வழங்கப் பரிந்துரை செய்த சிறீதரனின் செயல் தமிழரசுக் கட்சியின் உண்மைத் தொண்டர்களை விசனமடையச் செய்துள்ளது.