நாட்டில் நேற்றைய தினம் வாகன விபத்துகள் காரணமாக 12 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
அவற்றில் 8 மரணங்கள் நேற்று இடம்பெற்ற விபத்துகளில் பதிவாகியுள்ளன.
ஏனைய நால்வரும் இதற்கு முன்னர் ஏற்பட்ட விபத்துகளில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தனர்.
இவ்வாறு மரணித்தவர்களில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வரும் பாதசாரிகள் நால்வரும் அடங்குவதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது விபத்துகள் மூலம் நாளாந்தம் 10 முதல் 12 உயிரழப்பு சம்பவங்கள் பதிவாகின்றன.
இது மிகவும் வருத்தமடையக் கூடிய விடயமாகவுள்ளது.
வாகனத்தை செலுத்துபவர்களும் பாதசாரிகளும் அவதானமாக செயற்பட வேண்டியது கட்டாயமாகும்.
எனவே, எதிர்வரும் நாட்களில் வாகன சுற்றிவளைப்புகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் பிரதிகாவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.