பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி சென்றமைக்காக சிவாஜிலிங்கத்திடம் காவல்த்துறையினர் வாக்குமூலம் பதிவு

Sivaji lingam scaled e1605791458956
Sivaji lingam scaled e1605791458956

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில், நீதிமன்ற தடையுத்தரவை மீறி கலந்துகொண்டமைக்காக தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் காவல்த்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இன்றையதினம் வல்வெட்டித்துறையில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து சுமார் ஒருமணிநேரம் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் காவல்த்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.