நாளையிலிருந்து தனியார் போக்குவரத்துச் சபை பேருந்துகள் நெடுந்தூர பேருந்து நிலையத்தில் சேவையில் ஈடுபடாது என வடமாகாண தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் சிற்பரன் தெரிவித்தார்.
இன்றையதினம் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ் மாநகர முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க புதிதாக திறக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டிருந்த நிலையில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் இன்றையதினம் சேவையில் ஈடுபடாது புறக்கணித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று மதியம் மாநகர முதல்வர் அலுவலகத்தில் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் உடன் இடம்பெற்ற சந்திப்பின்போது இலங்கை போக்குவரத்து சபையினர் நெடுந்தூர பேருந்து நிலையத்தில் சேவையில் ஈடுபட சம்மதிக்காததன் காரணமாக தனியார் போக்குவரத்து சங்கத்தினர் ஆகிய நாங்களும் குறித்த பேருந்து நிலையத்தில் சேவை புரிவதை இடைநிறுத்தி நாங்கள் வழமையாக சேவையில் ஈடுபடும் யாழ் நகர மத்திய பேருந்து நிலையத்துக்கு பின்புறமாக எமது பேருந்துகள் வெளி மாவட்டங்களுக்கான பேருந்து சேவையில் ஈடுபடும் என தெரிவித்தார் எனவே பொதுமக்கள் வழமையான இடத்தில் எமது சேவையினை பயன்படுத்திக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.