வட மாகாணத்தில் மேலும் 16 பேருக்கு நேற்று கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் நேற்றைய தினம் 244 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலேயே இவ்வாறு 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அவர்களில் 3 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் பருத்தித்துறை வைத்திய அதிகாரி பிரிவில் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.