ஜனாதிபதியை பின்பற்றும் இராஜாங்க அமைச்சர்

dumintha thissananyaka
dumintha thissananyaka

இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க நேற்றைய தினம் விமான நிலையத்தில் சாதாரண பயணிகள் பகுதியினூடாக வெளிநாடு (நேபாளம்) சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரபுக்கள் செல்லும் பிரத்தியேக நுழைவுப் பாதையின் ஊடாக செல்ல முடியுமாக இருந்தும், சாதாரண பயணிகள் செல்லும் வழியில் அவர் விமானத்தில் ஏறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது இந்தியாவிற்கான விஜயத்தின் போது சாதாரண பயணிகள் செல்லும் பாதையினூடாக விமானத்தை அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.