கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக அவர் ஜனாதிபதியினால் கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரவையின் ஒப்புதலுக்கமைய ஜனாதிபதியினால் இராஜாங்க அமைச்சர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கப்படவுள்ளது.
இதற்கமைய முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளராக இலங்கை நிருவாக சேவையில் மூத்த அதிகாரிகளில் ஒருவரான சுந்தரம் அருமைநாயகம் நியமிக்கப்படவுள்ளார்.
இதற்கான அறிவிப்பு நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.