ஒரு கிலோ ஹெரோயினுடன் சந்தேக நபர் கைது!

kaithu

கிரான்ட்பாஸ் – நாகலகம் வீதியில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதன்போது, அவரிடமிருந்து ஒரு கிலோ 152 கிராம் அளவுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர், தேங்காய் விற்பனையில் ஈடுபடும் போர்வையில், ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.