இலங்கையில் வேகமாக பரவும் தோல்நோய்

images 6
images 6

டைனியா தொற்று காரணமாக ஏற்படும் தோல் நோய் அனுராதபுர பகுதியில் வேகமாக பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களின் தோலில் சிவப்பு புள்ளிகள் தோன்றும் என்று அனுராதபுர போதனா வைத்தியசாலையின் டாக்டர் ஹேமா வீரகோன் தெரிவித்தார்.

இதற்கு மருத்துவரிடம் சென்று முறையான சிகிச்சையைப் பெறுவதன் மூலம் நோயைக் குணப்படுத்த முடியும் என்றும் டாக்டர் கூறினார்.

சாதாரணமாக விட்டால் உடல் முழுதும் பரவுவதுடன், ஏனையோருக்கும் தொற்றும் ஆபத்து உள்ளது.

டைனியா (அல்லது கருப்பு குழாய்) தொற்று என்பது வெவ்வேறு பூஞ்சைகளால் ஏற்படும் ஒரு நோயாகும். பூஞ்சை உடலின் வெவ்வேறு பகுதிகளை பாதிக்கின்ற தோல் நோயாகும்.