புதையல் தோண்டிய குற்றச்சாட்டுக்காக ஆறு பேர் கைது

kaithu

உஹனை பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டுக்காக ஆறு சந்தேக நபர்களை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

தனியார் நிலமொன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்ததுடன், அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதானவர்கள் அம்பாறை மற்றும் உஹனை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

இதேவேளை அவர்களை அம்பாறை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.