மூன்று பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த தாய்; மேலும் இரு பிள்ளைகளின் சடலங்கள் மீட்பு!

IMG20210303172842 01
IMG20210303172842 01

கிளிநொச்சி – வட்டக்கச்சியில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த நிலையில் மரணமடைந்த மேலும் இரு பிள்ளைகளின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.

தாயார் காப்பாற்றப்பட்ட நிலையில் 2 வயது மகன் நேற்று சடலமாக மீட்பட்டார். இந்த நிலையில் 8 வயதுடைய மகள், 5 வயதுடைய மகன் ஆகியோரின் சடலங்கள் இன்று (4) மீட்கப்பட்டது.

கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருப்பினும் இந்த சம்பவம் குறித்து தர்மபுரம் காவல்துறையினர் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவம் வட்டக்கச்சி ஒற்றைக்கை பிள்ளையார் கோவிலடி என்ற பகுதியில் இடம்பெற்றிருப்பதாக தெரியவருகிறது