வவுனியா – நெடுங்கேணி பகுதியில் கேரளா கஞ்சாவுடன் நால்வரையும் யானைத்தந்தத்துடன் ஒருவரையுமாக ஐவரை நேற்று இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.
நெடுங்கேணி பகுதியில் நேற்று (03) மாலை நால்வர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து சென்றுள்ளனர். குறித்த நால்வரையும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் சோதனை செய்த போது சிறு சிறு பொதிகளாக கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த 250கிராம் கேரளா கஞ்சாவினை கைப்பற்றியுள்ளனர்.
நெடுங்கேணி – பட்டிக்குடியிருப்பு, கீரிசுட்டான் , மதுரம்பிட்டி போன்ற பகுதிகளை சேர்ந்த (19,27,40,48) வயதுடைய நால்வரையும் குறித்த சந்தேகநபர் ஒருவருடைய பட்டிக்குடியிருப்பு வீட்டில் சோதனை மேற்கொண்ட போது யானைத்தந்தமும் கைப்பற்றப்பட்டதுடன் 68 வயதுடைய தந்தை ஒருவரையும் கைது செய்த இராணுவத்தினர் ஐவரையும் நெடுங்கேணி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.