மாவத்தகமையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

1026021 accident
1026021 accident

மாவத்தகமை பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட வாகன விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள பிரதான வீதியில் பயணித்த வேனொன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்துடன் மோதுண்டமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் வேனில் பயணித்த களுத்துறை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், வேனின் சாரதியும் மேலும் ஒரு பெண்ணும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக தற்சமயம் குருணாகல் வைத்தியசாலயைில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேனின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க நிலையே விபத்துக்கான காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ள காவல்துறையினர் , இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.