இலஞ்சம் பெற்ற காவல்துறை அதிகாரி கைது

kaithu 1

இருபதாயிரம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் மஹரகம காவல்நிலையத்தைச் சேர்ந்த சார்ஜன்ட் ஒருவர் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் பத்மினி வீரசூரிய இதனை தெரிவித்துள்ளார்.

கனேடிய பிரஜை ஒருவரிடமே சந்தேகநபர் இந்த இலஞ்ச தொகையை பெற்றதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த கனேடிய பிரஜைக்கு சொந்தமான கெப் ரக வாகனம் ஒன்று குற்றச்சம்பவமொன்று தொடர்பில் மஹரகம காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில், அதனை விடுவிப்பதற்காகவே குறித்த காவல்துறை சார்ஜன்டுக்கு இந்த இலஞ்சத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.