இலஞ்சம் பெற்ற 14 பேர் கைது

kaithu

இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் இலஞ்சம் பெற்ற சம்பவங்கள் தொடர்பில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஆணைக்குழுவின் விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.

13 வெற்றிகரமான சுற்றிவளைப்புக்களில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கடந்த வருடம் குறித்த காலப்பகுதியில் கைது செய்யப்பட்டவர்களை விட இவ்வருடம் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நாடொன்றை உருவாக்குவதற்காக தொடர்ந்தும் இவ்வாறான சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படும் என இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்துள்ளது.