ஜனாஸாக்களை எமது மண்ணில் புதையுங்கள் என்கிறார் முசலி பிரதேச சபை தவிசாளர்

h 56327024 scaled 1 e1605427253276
h 56327024 scaled 1 e1605427253276

கொரோனா தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை முசலிப் பிரதேசத்தில் அடக்கம் செய்வதில் எந்த சிக்கலும் இல்லை என முசலி பிரதேச சபை தவிசாளர் A.G.H. சுபிகான் தெரிவித்தார்.

அரசாங்கம் கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியுள்ள நிலையில், எங்கு அடக்கம் செய்வது என்ற முடிவு எடுப்பதில் அரசுக்குள் இழுபறி நிலவுகிறது.

இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர், முசலி மண்ணில் அடக்கம் செய்வதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

அண்மையில் கொழும்பில் இருந்து வந்த நிபுணர் குழு முசலிப் பிரதேசத்தில் ஒரு இடத்தினை உறுதிப்படுத்தியது. அந்த இடம் அடக்கம் செய்ய மிகவும் பொருத்தமாகவும் இருக்கும்.