வவுனியா புளியங்குளம் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் செயற்பாடுகளை கணினி வலையமைப்பின் கீழ் வகைப்படுத்தும் நிகழ்வு இன்று (04) இடம்பெற்றது.
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையின் கீழ் வவுனியா மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ரி.திரேஸ்குமாரினால் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
எதிர்வரும் காலங்களில் புளியங்குளம் சமுர்த்தி வங்கியின் சேவைகள் அனைத்தும் கனி மயப்படுத்தப்பட்டதாக பிரதேச மக்களுக்கு வழங்கவுள்ளது.
கணனி மயப்படுத்தப்பட்ட இவ் வங்கி இன்றைய தினம் காலை 10 மணியிலிருந்து தனது சேவையை ஆரம்பித்துள்ளது.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி எஸ்.பத்மரஞ்சன், திணைக்களத்தின் கணக்காளர் என்.சிவதர்சன், தலைமைபீட முகாமையாளர் எஸ்.சுசிந்திரராஜா மற்றும் சிரேஷ்ட முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச மக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.