சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்கள அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சௌபாக்கிய வார வேலைத்திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் உடுப்புக்குளம் கிராம சேவகர் பிரிவில் இன்று காலை 10.00மணிக்கு இடம்பெற்றது.
இதன்போது சௌபாக்கியா வாரத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் சௌபாக்கியா வீட்டுத்திட்ட கையளிப்பு மற்றும் சமுர்த்தி சிப்தொர புலமைப் பரிசில் வழங்கல், ஆகிய நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.
இந் நிகழ்வில் சமுர்த்தி சிரேஷ்ட முகாமையாளர், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர், கட்டுப்பாட்டுச் சபை தலைவர், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலதரப்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.