சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்கள அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சௌபாக்கிய வாரத்தின் வேலைத்திட்டத்தின் மாவட்ட நிகழ்வினை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(04) காலை உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற்ற குறித்த நிகழ்வில் சௌபாக்கியா வாரத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் உணவு உற்பத்தி, தொற்றா நோய்கள் தொடர்பான வலுவூட்டல் கருத்தரங்கு, சமுர்த்தி சிப்தொர புலமைப் பரிசில் வழங்கல், ஆலோகா கடன் வழங்கல் ஆகிய நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.
இந் நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், சமுர்த்தி முகாமையாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலதரப்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.