இயற்கை திரவ எரிவாயு மின்நிலையத்தை நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்!

OIP 3
OIP 3

நாட்டின் முதலாவது இயற்கை திரவ எரிவாயு மின்நிலையத்தை நிர்மாணிக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளது.

இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கெரவலபிட்டியில் இதற்கான அடிக்கல் இன்றைய தினம் நாட்டப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மின்நிலையம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர், 300 மெகாவோல்ட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.