சௌபாக்கிய விஷேட வீட்டு லொத்தர் வேலைத்திட்டத்தின் வீடு கையளிப்பு!

masthaan 6
masthaan 6

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட பாண்டியன் குளம் கிராமத்தில் சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் “சௌபாக்கிய விஷேட வீட்டு லொத்தர் வேலைத்திட்டத்தின்” மூலம் 65 வயதுக்கு மேற்பட்ட சமூர்த்தி பெறும் தனி அங்கத்தவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடொன்றை நேற்று (04.03.2021) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்கள் நாடாவை வெட்டி திறந்து வைத்ததுடன் குறித்த வீட்டை உத்தியோகப்பூர்வமாக பயனாளிக்கு கையளித்து வைத்தார்.

அத்துடன் சமூர்த்தி பயனாளிகளுக்கான சமூகப் பாதுகாப்பு சேமிப்பு நிதியத்திலிருந்து மருத்துவம், வாழ்வாதார முன்னேற்றத்துக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான ஒரு தொகை உதவிப் பணத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்கள் வழங்கி வைத்தார்.

குறித்த நிகழ்வில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி. ரஞ்சனா, சமூர்த்தி வங்கி கருத்திட்ட முகாமையாளர், சமூர்த்தி வங்கி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.