இரணைதீவு பகுதியில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களை புதைப்பது தொடர்பிலேயே யாழ்ப்பாணத்தில் பல தேவாலயங்களில் இன்றைய தினம் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் ஒரு அங்கமாக யாழ்ப்பாணம் பொஸ்கோ புனித திரேசா தேவாலயத்தில் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது முஸ்லிம்களில் உடலை புதைப்பது தொடர்பில் அரசாங்கம் கூடிய அக்கறை செலுத்தி மீள் குடியேறி வாழ்ந்து வருகின்ற இரணைதீவு மக்களுக்கு சரியானதொரு முடிவை வழங்க வேண்டுமென தெரிவித்து குறித்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது