பதுளை புற்றுநோய் பிரிவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் ஒருவர் பலி!

h1 2
h1 2

பதுளை பொது வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் இதுவரை இரண்டு பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 05 ஆம் திகதி மரணமொன்று பதிவாகியிருந்த நிலையில் இன்று (07) காலை குறித்த சிகிச்சை பிரிவில் இருந்த மேலும் ஒரு புற்றுநோய் நோயாளர் உயிரிழந்துள்ளதாக அச்சங்கத்தின் ஊவா மாகாண ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பதுளை பொது வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் கடந்த தினங்களில் கொரோனா தொற்றாளர்கள் 34 பேர் இனங்காணப்பட்டனர்.

அவர்களுக்கிடையில் நோயாளர்கள் மற்றும் அவர்களை கவனித்துக் கொள்ள தங்கியிருந்த சிலர் மற்றும் கர்ப்பிணி வைத்தியர் ஒருவர் உட்பட அலுவலக ஊழியர்கள் அடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று (06) மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனையில் மேலும் இரு தொற்றாளர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் பதிவானதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.