நபர் ஒருவரை காணவில்லை என முறைப்பாடு!

IMG 25e314e9ffb5d3e0524f33268c9a1b05 V 1
IMG 25e314e9ffb5d3e0524f33268c9a1b05 V 1

யாழ்ப்பாண மல்லாகத்தை சேர்ந்த நல்லதம்பி கதிர்காமலிங்கம் என்பவரை நேற்றைய தினத்திலிருந்து காணவில்லை என தெல்லிப்பழை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மல்லாகம் பகுதியை சேர்ந்த குறித்த நபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்று மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

அவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் கீழ் உள்ள தொலைபேசி இலக்கங்களிற்கு அழைப்பை ஏற்படுத்தி தெரியப்படுத்துமாறு உறவினர்களால் கோரப்பட்டுள்ளது.

தொடர்பு இலக்கம்-
0772247015,
0711200800