நீராவியடி பிள்ளையார் விவகாரம்- ஜனவரி வரை ஒத்தி வைப்பு

neeraviyadi
neeraviyadi

நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக் குளத்துக்கு அருகில் பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்தமை தொடர்பில் நீதிமன்றின் கட்டளையை அவமதித்த பௌத்த பிக்குகள் உள்ளிட்ட சிலரை பொலிஸார் தேடி வருவதாக தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்றைய தினம் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை நீதிமன்ற கட்டளையை அவமதித்து பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்தவர்களை, அவர்களின் உருவங்களை வைத்துத் தேடிக் கொண்டு வருவதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்குமாறு பொலிஸார் மன்றில் விண்ணப்பம் செய்தனர்.

கால அவகாசம் வழங்கிய நீதிபதி ஜனவரி 20ஆம் திகதி உரிய அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.