சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சமுர்த்தி பயனாளிகளின் குடுப்பங்களுக்கான அலோக கடன்திட்டம் மற்றும் சிப்தொர புலமைப்பரிசில் ஆகியன மாவட்ட செயலகத்தில் நேற்று (08) இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது மின்சார இணைப்பு பெறுவதற்கான அலோக கடன்திட்டம் ஆறு பயனாளிகளுக்கம், 2020கல்விப் பொதுதராதரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பத்து மாணவர்களுக்கான சிப்தொர புலமைப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கரைதுறைப்பற்று பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.