வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் மல்லாவி காவற்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்கப்பட்டமை தொடர்பிலே அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏலவே முல்லைத்தீவு மற்றும் மாங்குளம் காவற்துறையினர் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தொடர்பில் காவற்துறையினர் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரிடமும் வாக்குமூலம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.