கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் அடுத்தக்கட்டமாக எதிர்வரும் சனிக்கிழமை முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு கணித்துள்ளது.
இதனை கருத்திற்கொண்டே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக பதில் பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.