வடக்கின் வாக்குகளை தவற விட்டமைக்கான காரணம் இதோ!!

rohitha rajapaksa
rohitha rajapaksa

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கிலுள்ள மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு வாக்களிக்காமைக்கு காரணம் அவர்கள் இல்லை எனவும் அதற்கான காரணம் தாமே என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களின் ஒருவரான ரோஹித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்களுக்கான செயற்றிட்டங்களை மேற்கொள்கின்ற வேளையில் அவர்களை குழுக்களாக பிரிக்காது அனைவரும் இலங்கையர் எனும் ஒருமைப்பாட்டின் கீழ் அவர்களுக்கான சேவை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்களின் மனதை வெல்வதற்காக அவர்களின் தேவைகளை அறிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.