ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

kaithu

கொழும்பு – டேம் வீதி பகுதியில் காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நேற்று (15) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்  போது ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 29 மற்றும் 37 வயதுடையவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் இருவரும் கொழும்பு 02 மற்றும் 12 ஐ சேர்ந்தவர்கள் என விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.