அரசிலிருந்து வெளியேறுமாறு எமது மக்கள் கோரிக்கை விடுப்பார்களாயின் அதனைச் செய்வதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராகவே இருகின்றது.என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
கடந்த பொதுத்தேர்தலின்போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தோற்கடிப்பதற்குத் திட்டம் வகுத்தனர். சிலர் கழுகு என்றுகூட எம்மையும் கட்சியையும் விமர்சித்தனர். இனிமேல் கிராம மக்கள் வழங்கும் தீர்ப்பின் – கோரிக்கையின் பிரகாரமே எமது தீர்மானம் அமையும்.
பதவிகளைத் துறக்குமாறோ அல்லது வெளியேறுமாறோ எமது மக்கள் கோரிக்கை விடுப்பார்களாயின் அதனை ஏற்றுச் செயற்படுவோம் – என்றார்.