திருக்கோவில் பிரதான வீதியில் பாரிய விபத்து

1026021 accident
1026021 accident

அம்பாரை திருக்கோவில் காவல்துறை பிரிவுக்குட்பட்ட தாண்டியடி நேருபுரம் பொத்துவில் பிரதான வீதியில் டிப்பர் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கில் பாரிய விபத்து ஏற்பட்டு ஒருவர் காயமடைந்துள்ளதாக திருக்கோவில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ் விபத்தானது இன்று புதன்கிழமை அதிகாலை வேலையில் இடம்பெற்றுள்ளதாகவும் பொத்துவில் பிரதேசத்தில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிலுடன் மோதுண்டு விபத்து ஏற்பட்டு இருப்பதாக திருக்கோவில் காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் முலம் தெரிவிக்கப்படுகின்றன.

இவ் டிப்பர் வாகனம் பொத்துவில் பிரதேசத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடி வோட் வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை ஏற்றிக் கொண்டு அக்கரைப்பற்று நோக்கி பயணித்துக் கொண்டு இருந்த வேளை வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் இருந்த வீதி தடுப்புக்களை உடைத்துக் கொண்டு டிப்பர் வாகனம் பள்ளத்தில் குடைசாய்ந்து கிடப்பதையும் அவதானிக்க கூடியதாக இருந்தன.

இவ்விப்பதில் மோட்டார் சைக்கில் பாரிய சேதமடைந்துள்ளதுடன் அதனை செலுத்திச் சென்றவர் காயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பியதுடன் இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.