யாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

IMG 20210317 WA0009
IMG 20210317 WA0009

யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதைப்பொருளை விநியோகித்து வரும் முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்புப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சுழிபுரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய முச்சக்கர வண்டிச் சாரதியே யாழ்ப்பாணம் நகரில் வைத்து நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 2 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் பல இடங்களுக்கும் கஞ்சா போதைப்பொருளை விநியோகிப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள அதே வேளை இன்றையதினம் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.