இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

202001060157277425 Rain in Papanasam Manimuthar area SECVPF
202001060157277425 Rain in Papanasam Manimuthar area SECVPF

தென், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் பல இடங்களிலும், நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

தென் மாகாணத்தில் சில இடங்களிலும், இரத்தினபுரி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் 50 மி.மீ.க்கு அதிகளவான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் எனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான காலநிலை நிலவும் எனவும் மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலைமைகளை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய காற்று மற்றும் மின்னல் தாக்கம் போன்றவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.