சாவகச்சேரியில் திருமணமான 3 மாதத்திலேயே இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
நுணாவில், வைரவர் கோவிலடியை சேர்ந்த 21 வயதான இளம் பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை அவது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அயலவர்கள் மீட்டு, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
3 மாதங்களின் முன்னரே யுவதி காதல் திருமணம் செய்திருந்தார், யுவதியின் பெற்றோர் சம்மதிக்காத நிலையில், காவல் நிலையம் வரை விவகாரம் சென்றது.
காதல் திருமணம் செய்யப் போவதாக ஜோடி உறுதியாக இருந்து திருமணம் செய்து கொண்டனர், குடும்ப தகராற்றினாலேயே யுவதி உயிரை மாய்த்துள்ளார்.