சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரு மாணவர்கள் கைது!

kaithu

தமிழகத்தின் கள்ளகுறிச்சி மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றில் 13 வயது மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்கேதநபர்களான மாணவர்கள் இருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து இச்சிறுமி கல்வி கற்றுவந்துள்ளார். அதன்போது, 10 ஆம் தரத்தில் கற்கும் மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறுமியின் வீட்டில் எவரும் இல்லாத நேரம் அங்கு சென்ற மேற்படி மாணவர் அவரை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, தான் உல்லாசம் அனுபவித்ததை குறித்த மாணவர், தனது நண்பர்கள் இருவரிடம் கூறியுள்ளார். அதன்பின்னர், நண்பர்களான மாணவர்கள் இருவர் அச்சிறுமியை மிரட்டி அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி குறித்த மாணவர்கள் வந்துசெல்வதை அவதானித்த அயலவர்கள் அவ்வீட்டை நோட்டமிட்டுள்ளனர். அதன்போது, அங்கிருந்த இரு மாணவர்கள் தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்போது, குறித்த சிறுமி தனக்கு நேர்ந்த துயரத்தை கூறி அழுதுள்ளார். இதனையடுத்து. உளுந்தூர்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேகநபர்களான இரு மாணவர்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மற்றைய மாணவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரைத் தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன