ரவி கருணாநாயக்க சிறைச்சாலையினுள் தனிமைப்படுத்தல்

images 17
images 17

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர் வெலிக்கடை சிறைச்சாலையின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வெலிக்கடை சிறைச்சாலையின் பேச்சாளர் ஒருவர் இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, கசுன் பலிசேன உள்ளிட்ட 8 பேரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேல் நீதிமன்றின் விஷேட நிரந்தர நீதாயம் உத்தரவிட்டது.

2016 மார்ச் மாதம் 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி தொடர்பான வழக்கின் அடிப்படையில் இந்த உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.