இராணுவ சிப்பாயை தாக்கிய பிரதேச சபை உறுப்பினர்கள் கைது

ARREST sattamani 3
ARREST sattamani 3

விசேட தேவையுடைய இராணுவ சிப்பாய் மீது தாக்குதல் நடத்தியமைக்காக பண்டாரகம பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

44 வயதான ராகமை பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் ஏப்ரல் முதலாம் திகதிவரை காவல்துறை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பிரதிப் காவல்துறைமா அதிபரும், காவல்துறை ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

இதேவேளை ஒரு உணவகத்தில் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காக பியகம பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதித்துறை மருத்துவ அதிகாரியின் விசாரணையில் பிரதேச சபை உறுப்பினர் தாக்குதல் சம்பவத்தின்போது மது போதையில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது என்று அஜித் ரோஹன கூறினார்.