மியன்மாரில் கைதான மகன்களை அழைத்துவருமாறு கோரிய தாய்

11 2
11 2

மியன்மாரில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் குழுவில் உள்ள தமது இரண்டு மகன்களையும் விரைவில் நாட்டுக்கு அழைத்து வருமாறு தெபருவெவவில் உள்ள தாய் ஒருவர் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

இரண்டு படகுகளில் பயணித்த 12 இலங்கையர்கள் அண்மையில் மியன்மாரில் கைது செய்யப்பட்டனர்.

கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி பயணித்த படகில் 7 பேரும், 27ஆம் திகதி மற்றுமொரு படகில் 5 பேரும் சென்றிருந்த நிலையில் மியன்மாரில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருகோணமலை துறைமுகத்தில் இருந்து அவர்கள் பயணித்ததோடு கடல் அலையின் சீற்றம் காரணமாக அவர்கள் பயணித்த படகு மியன்மார் நோக்கி சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் 5 பேருடன் பயணித்த படகில் உள்ள தமது இரண்டு மகன்களையும் நாட்டுக்கு விரைவில் அழைத்து வருமாறு 69 வயதான தாய் ஒருவர் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.