மேலும் 718 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

திரும்பினர் 2
திரும்பினர் 2

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று(வியாழக்கிழமை) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 21 விமானங்கள் பயணித்துள்ளன.

இந்த காலப்பகுதியில் 11 விமானங்கள் ஊடாக 718 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளனர்.

இதற்கமைய கட்டாரிலிருந்து 150 பேரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயிலிருந்து 125 பேரும் இலங்கையினை வந்தடைந்துள்ளனர்.

குறித்த அனைவரையும் தனிமைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், 10 விமானங்களில் 450 பயணிகள் காட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

இவர்களில் 110 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய்க்கும், 101 கட்டாரிற்கும் பயணித்துள்ளனர்.

இந்த காலப்பகுதியில், 42 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.