மனித உரிமை மாநாட்டில் இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்காது

download 2 19
download 2 19

ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவு அளிப்பதா? இல்லையா? என்பது தொடர்பாக இன்னும் தீர்மானிக்கவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.

இந்திய பத்திரிகை ஒன்று இந்திய வெளிவிவகார அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை இந்தியா எதிர்த்து வாக்களிக்கும் என இந்தியா உறுதி வழங்கி இருப்பதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற எட்மிரல் ஜயனாத் கொலம்பகே தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக ஹிந்து பத்திரிக்கை இந்திய வெளிவிவகார அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தொடர்பாக இன்னும் இந்தியா எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.