பங்களாதேஷ் நாட்டு பிரதமர் ஷெய்க் ஹசீனாவின் அழைப்பினையேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்களாதேஷ் நாட்டுக்கான இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை நாளை மேற்கொள்ளவுள்ளார்.
பங்களாதேஷ் நாட்டின் தேசபிதாவாக கருதப்படும் பங்கபந்து ஷெய்க் முஜிபுர் ரஹ்மானின் பிறந்த நாள் மற்றும் பங்களாதேஷ் நாட்டின சுதந்திர கொண்டாட்டங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பிரதமர் இவ்விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.
பங்கபந்து செய்க் முஜ்பர் ரஹ்மானின்100 ஆவது பிறந்த தின நிகழ்வினையும்,பங்களாதேஷ் நாட்டின் சுதந்திர கொண்டாட்டத்தையும் முன்னிட்டு அறிவித்துள்ள நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அங்கு சிறப்பு உரை நிகழ்த்தவும் உள்ளார்.
இவ்விஜயத்தின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனா,பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் அப்துல் அமீன், பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர், மற்றும் பங்களாதேஷ் வங்கி ஆளுநர் ஆகிய உயர்மட்ட தலைவர்களுக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இடம் பெறவுள்ளது.
சுகாதாரம், விவசாயம், வியாபாராம் மற்றும் முதலீடு,பாதுகாப்பு , சமுத்திர பாதுகாப்பு, கல்வி மற்றும் சுற்றுலா என பல்துறைசார் விடயங்கள் தொடர்பில் இருதரப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம் பெறவுள்ளன.