சுகாதார வழிமுறைகளை பின்பற்ற தவறிய மூவர் கைது!

ajith rohana1 1
ajith rohana1 1

சுகாதார வழிமுறைகளை பின்பற்ற தவறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரும் நேற்று(வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக காவர்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியினை பின்பற்றாதவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற தவறிய மூவாயிரத்து 363 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.