பிரதமர் பங்களாதேஷ் சென்றடைந்தார்

athavan mhi 720x375 1
athavan mhi 720x375 1

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பினை ஏற்று இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்களாதேஷ் சென்றடைந்தார்.

பிரதமர் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் யு.எல் 189 ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை பங்களாதேஷ் நோக்கி பயணமானர்.

குறித்த விஜயத்தின் போது பிரதமர், பங்களாதேஷ் குடியரசின் தேசத்தின் தந்தையாக போற்றப்படும் பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மான் அவர்களின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றில் கலந்து கொள்ளவுள்ளார்.

பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மான் அவர்களின் ஜனன தின நூற்றாண்டு விழா மற்றும் பங்களாதேஷின் சுதந்திர பொன்விழா ஆகியவற்றை முன்னிட்டு பிரகடனப்படுத்தப்பட்ட ‘முஜிப் ஆண்டு’ தொடர்பாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று பிற்பகல் சிறப்பு உரையாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.